தேவையான பொருட்கள்:
எண்ணெய் - மூன்று ஸ்பூன்
சீரகம் (அ) சோம்பு (அ) ஓமம் - சிறிது (சுவைக்கேற்ப )
மெலிதாக துருவிய பீட் ரூட் - இரண்டு கப்
பெரிய வெங்காயம் - பொடியாக நறுக்கியது - அரை கப்
பொடியாக நறுக்கிய தக்காளி - இரண்டு ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - ஒரு டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா தூள் - ஒரு ஸ்பூன்
மிளகாய் தூள் , மல்லி தூள் - தலா அரை ஸ்பூன்
வேகவைத்து மசித்த உருளை கிழங்கு - ஒரு கப்
உப்பு தேவையான அளவு
பொடிதாக அரிந்த மல்லிதழை - ஒரு கைப்பிடி
எலுமிச்சை சாறு - ஒரு ஸ்பூன்
காய்ந்த பிரட் தூள் - நான்கு ஸ்பூன்
செய்முறை:
- அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் ஓமம், வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
- துருவிய பீட் ரூட் சேர்த்து வதக்கி , மூடி போட்டு மிதமான தீயில் பீட் ரூட்டை பச்சை வாடை போகும் வரை வேக விடவும். தண்ணீர் சேர்க்க தேவை இல்லை.
- மசாலா பொடிகள் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும். தேவைபட்டால் தண்ணீர் தெளித்து கொள்ளலாம்.
- மசித்த உருளை கிழங்கு, மல்லிதழை, எலுமிச்சை சாறு சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
- இந்த கலவையை நன்கு ஆறியதும் , ஒரே அளவிலான உருண்டைகள் பிடித்து வடைபோல் தட்டி, பிரட் தூளில் பிரட்டி எடுத்து வைத்து கொள்ளவும்.
- அடுப்பில் தோசை கல் வைத்து, லேசாக எண்ணை விட்டு கட்லெட் இருபுறமும் பொன்னிறமாகும் வரை சுட்டு எடுக்கவும்.
- சாதம் வகைகளுக்கு தொட்டு கொள்ளலாம். மாலை சிற்றுண்டியாகவும் பரிமாறலாம்.