Tuesday, April 26, 2011

தக்காளி சட்னி


தேவையான பொருட்கள்:
 
எண்ணெய் - 4 ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 3
பூண்டு (பெரிய பல்) - 4
இஞ்சி - 2 துண்டு (2 பெரிய பல் பூண்டிற்கு சமமாக)
புதினா இலை - ஒரு கை
மல்லி தழை - ஒரு கை
பச்சை மிளகாய் - 2   (அல்லது) வறமிளகாய் - 3 .
கருவேப்பிலை - ஒரு கை
புளி - சின்ன நெல்லிக்காய் அளவு
உப்பு
தேங்காய் துருவல் (அல்லது) பொடியாக நறுக்கிய தேங்காய் பல் - 1 /4 கப் (தேங்காயை பற்களாக நறுக்கி போடுவதை விட துருவி சேர்த்தால் சட்னி ஒரே சீராக இருக்கும்)
 
செய்முறை:
 
  1. புதினா, மல்லி, கருவேப்பிலை இலைகளை சுத்தம் செய்து தண்ணீரில் கழுவி வைத்து கொள்ளவும்.
  2. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் உப்பு, தேங்காய் துருவலை தவிர அனைத்து பொருட்களையும் சேர்த்து வதக்கவும்.
  3. 2 நிமிடம் கழித்து உப்பு சேர்த்து வதக்கவும். இப்போது தக்காளி நீர் விட்டு நன்றாக வதங்கும்.
  4. 3 நிமிடம் கழித்து தேங்காய் துருவலை சேர்த்து லேசாக வதக்கிய பின் அடுப்பை அணைத்து விடலாம்.  
  5. ஆறியதும் மிக்சியில் போட்டு அரைத்தெடுங்கள். கம கம தக்காளி சட்னி ரெடி.
 
தோசை, இட்லி, தயிர் சாதம் இவற்றுடன் பரிமாறலாம்.

1 comment:

Mahi said...

சட்னியை விட அந்த தோசை ரொம்ப catchy-யா இருக்கு!:)

சூப்பர் ப்ரேக்ஃபாஸ்ட்!

Related Posts Plugin for WordPress, Blogger...