Thursday, April 7, 2011

செட்டிநாடு காலிப்ளவர் பருப்பு சூப்


கல்யாணத்துக்கு பின் முதல் தடவையா இந்த சூப் செய்த பொது என் கணவர் என்னை ரொம்ப கிண்டல் பண்ணினார். மஞ்ச கலர்-ல ஒரு தண்ணிய குடுத்து இத சூப்-ன்னு சொல்றியே-மா?-ன்னு கேட்டார். பொதுவா சூப்-னா நிறைய வெஜ்ஜிடபில், கார்ன் போட்டு வடிச்ச கஞ்சி மாதிரி கெட்டியா இருக்கும், அல்லது தக்காளி நிறைய போட்டு ரெட் கலர்-ல இருக்கும்.
ஆனா எங்க ஊரு பருப்பு சூப் துவரம் பருப்பு, நெய் சேர்த்து ஹெல்தி-யா செய்தது. பெரிய ஹோட்டல்-ல சாப்பிடுற வரைக்கும் சூப்-ன்னா எங்க ஊரு துவரம் பருப்பு சூப் மட்டும் தான் எனக்கு தெரியும்.  ஒரு தடவை இத ட்ரை பண்ணுங்க அப்புறம் சோள கஞ்சி சூப்பை நினைத்து கூட பாக்க மாட்டீங்க.
 
தேவையான பொருட்கள்:
 
  1. துவரம் பருப்பு - அரை கப் (சூப் திக்கா இருக்க கூடாது). பருப்பை கழுவி 10 நிமிடம் நீரில் ஊற போடவும்.
  2. காலிப்ளவர் - ஒரு கை அளவு (பொதுவா எந்த காயும் இதிலே சேர்க்க மாட்டாங்க. நான் கொஞ்சம் ஆர்வ கோளாறில் காலிப்ளவர் போட்டுருக்கேன்)
  3. பெரிய வெங்காயம் - 1 நீளமாக நறுக்கியது
  4. தக்காளி - 2 நீளமாக நறுக்கியது
  5. பச்சை மிளகாய் - 3  நீளமாக நறுக்கியது
  6. மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
  7. கொத்தமல்லி - பொடியாக அரிந்தது - ஒரு கை
  8. உப்பு  
தாளிக்க:
நெய் - 3  ஸ்பூன்
எண்ணெய் - ஒரு ஸ்பூன்
பிரிஞ்சி இலை, பட்டை, ஏலக்காய் - தலா 1
சோம்பு - அரை ஸ்பூன்
கருவேப்பிலை - கொஞ்சம்
 
செய்முறை:
 
  • பிரஷர் குக்கர்-ரில் நெய் + எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்திருக்கும் பொருட்களை போடவும்.
  • வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின் தக்காளியையும் சேர்த்து வதக்கவும்.
  • ஊற வைத்த பருப்பில் இருந்து  தண்ணீரை சுத்தமாக வடித்து விட்டு தக்காளியுடன் சேர்த்து வதக்கவும்.
  • கழுவிய காலிப்ளவர், மஞ்சள் தூள்,3 கப் தண்ணீர்,  உப்பு சேர்த்து 3 விசில் வரும் வரை சமைக்கவும்.
  • விசில் அடங்கியதும் குக்கரை திறந்து கொத்தமல்லி இலை, தேவையான அளவு தண்ணீர் (சூப் தண்ணியா இருந்தா தான் டேஸ்ட்-டா இருக்கும்) சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து விடவும்.
இது காலிப்ளவர் போடாத சூப்.
 
குறிப்பு: ஈவினிங் டிபன்-னா அப்டியே குடிக்கலாம். இல்லேன்னா சாதத்துல போட்டும் சாப்பிடலாம்.

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...