Tuesday, March 29, 2011

பூண்டு புளி குழம்பு

இந்த பெயரை கேட்டாலே ஒரே குஜால்ஸ் தான். அவ்வளவு சுவையான ரெசிபி. நல்லா சூடா சாதம் வெச்சி உருளைகிழங்கு பொரியல்-ஐ தொட்டுகிட்டு சாப்பிட்டா.... இஷ்ஷ்ஷ்ஷ் அமிர்தம் தான் போங்க. தேவையான பொருட்கள்:

  • முதல்ல ரெசிபி நாயகன் பூண்டு - பத்து அல்லது பதினைந்து பல் நல்லெண்ணெய் - ஆறு ஸ்பூன் கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பில்லை - கொஞ்சம்

  • வெந்தயம் - ஒரு ஸ்பூன்

  • சின்ன வெங்காயம் - ஒரு கை நிறைய. (சின்ன வெங்காயம் இல்லை என்றால் பெரிய வெங்காயம் ஒன்று)

  • தக்காளி - பெரியது ஒன்று

  • மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்

  • மிளகாய் தூள் - 2 ஸ்பூன்

  • மல்லி தூள் - 1 ஸ்பூன்

  • புளி - ஒரு நெல்லிக்காய் அளவு (புளியை தண்ணீரில் ஊற வைத்து கரைத்து கொள்ளவும்)

  • அரிசி மாவு - 2 ஸ்பூன்

  • உப்பு
செய்முறை

  1. தக்காளி, வெங்காயம் இரண்டையும் மிக்சி-யில் நன்றாக அரைத்து வைத்து கொள்ளவும்.

  2. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, வெந்தயம், கருவேப்பிலை சேர்க்கவும்.

  3. கடுகு பொரிந்ததும் பூண்டு பற்களை சேர்க்கலாம். இரண்டு நிமிடம் பூண்டு வதங்கியதும் அரைத்த வெங்காயம் தக்காளி சேர்க்கவும்.

  4. பச்சை வாடை போனதும் மஞ்சள், மிளகாய், மல்லி தூள்கள் + உப்பு சேர்க்கவும். பின் இரண்டு கப் தண்ணீர் விடவும்.

  5. தண்ணீர் நன்றாக வற்றி அல்லது பூண்டு வெந்ததும், அரிசி மாவை கால் கப் தண்ணீரில் கரைத்து சேர்க்கவும்.

  6. இரண்டு நிமிடம் கழித்து மல்லி இலை தூவி சூடாக பரிமாறவும்.

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...