Friday, April 1, 2011

பிரிஞ்சி சாதம் / Birinji Rice

இந்த போட்டோவோட ஒரு மூலையில் ஒரு பிரிஞ்சி இலை தெரியுதே, அதுனால இதுக்கு பிரிஞ்சி சாதம்-ன்னு பேரு வெச்சிருக்கேன்-ன்னு நினைக்காதீங்க. பொதுவா தேங்காய் பாலில் செய்த வெரைட்டி ரைஸ்-க்கு இந்த பேரு வெக்கிறாங்க, இந்த சாதம் தேங்காய் பாலில் செய்தது. சிலர் இதுல காய்கறி,மிளகாய் தூள் எல்லாம் சேர்த்து பிரியாணி மாதிரி செய்றாங்க. என்னோடது ரொம்ப சிம்பிள் வெர்சன்-ங்க. தேவையான பொருட்கள்:

  1. எண்ணெய் அல்லது நெய் - 4 ஸ்பூன்

  2. பிரிஞ்சி இலை - 2

  3. சோம்பு - ஒரு ஸ்பூன்

  4. ஏலக்காய் - 2

  5. கிராம்பு - 6 (வேற எந்த கார சாமான்களும் சேர்க்க போவது இல்லை. எனவே உங்கள் கார அளவை பொருத்து கிராம்பு கூட்டி/குறைத்து கொள்ளுங்கள்)

  6. பட்டை - 1 பீஸ்

  7. அன்னாசி பூ, ஸ்டார் பிரிஞ்சி போன்றவையும் உங்கள் விருப்பம் போல் சேர்த்து கொள்ளுங்கள்

  8. அரிசி - ஒரு கப் (பாஸ்மதி / நார்மல் சாப்பாடு அரிசி எது வேண்டுமானாலும் எடுத்து கொள்ளலாம்)

  9. தேங்காய் பால் - 2 1 /2 கப்

  10. 2 ஸ்பூன் பாலில் ஊற வைத்த 3 -4 இதழ் குங்கும பூ (அல்லது) 2 ஸ்பூன் நீரில் கரைத்த கால் ஸ்பூன் கேசரி பவுடர்

  11. நெய்யில் வருத்த முந்திரி பருப்பு & கிஸ்மிஸ் - கொஞ்சம்

  12. உப்பு

செய்முறை:



  • அரிசியை கழுவி 5 நிமிடம் ஊற வைத்து கொள்ளுங்கள். குக்கர்-ரில் எண்ணெய்/நெய் விட்டு காய்ந்ததும் எண் 2 -7 -ல் உள்ள அனைத்து பொருட்களையும் சேர்க்கவும்.

  • ஒரு நிமிடம் கழித்து, தண்ணீரை நன்றாக வடித்து விட்டு அரிசியை சேர்த்து, அரிசி ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் வரும் வரை வதக்கவும். தேங்காய்பால் உப்பு சேர்த்து மிதமான தீயில் 15 நிமிடம் வைக்கவும். விசில் வராவிட்டாலும் பரவாயில்லை, விசில் வந்தால் ஒரு விசில் போதும்.

  • பிரஷர் அடங்கியதும் குங்கும பூ/கேசரி பவுடர்-ஐ சாதம் நடுவில் மட்டும் ஊற்றவும். வருத்த முந்திரி & கிஸ்மிஸ்-ஐ மேலே கொட்டி மூடி விடவும். முடிந்தால் 1 நிமிடம் மிதமான தீயில் வைக்கலாம்.

  • 5 நிமிடம் கழித்து மூடியை திறந்து சாதத்தை நன்றாக கிளறிவிட்டு சூடாக பரிமாறுங்கள்.

குறிப்பு: தயிர் பச்சடி, சால்னா, காரமான சிக்கன் / காய்கறி கூட்டு இவற்றுடன் சுவையாக இருக்கும்.

2 comments:

Sowmya said...

ஆஹா மணக்குது பிரிஞ்சி சாதம்.

ChitraKrishna said...

நன்றி சௌம்யா. உங்கள் கருத்துக்களால் எனக்கு உற்சாகம்.

Related Posts Plugin for WordPress, Blogger...